நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (21:38 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.  வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ள லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று ஆறுதல் வெற்றிக்காக விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் கே எல் ராகுல், மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. பேயாட்டம் ஆடிய நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். அவர் இன்னிங்ஸில் 5 பவுண்டர்களில் மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம்.  இந்த இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டிப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments