Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி 10 - 12 ஓவர்கள் மிகவும் முக்கியமானது - தோனி கருத்து

கடைசி 10 - 12 ஓவர்கள் மிகவும் முக்கியமானது - தோனி கருத்து
, வெள்ளி, 30 ஜனவரி 2015 (14:51 IST)
விக்கெட் கையில் இருக்கும் போது கடைசி 10 - 12 ஓவர்களில்  நாங்கள் எப்படி பேட் செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “ஆட்டத்தின்போது ஓவ்வொரு ஜோடியும் வெற்றிகரமாக விளையாடினாலும், உலகக் கோப்பையில் விளையாடும் 11 பேர் குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால் அது வெற்றியைப் பாதிக்கிறது.
 
அனைவரும் நல்ல உடல் திறனுடன் இருக்கிறார்கள். முதல் 11 பேர் விளையாடுவார்கள். அடுத்து நிலைமைகளைப் பொறுத்து அடுத்த 11 பேர் சார்ந்து இருக்கலாம். இறுதியில் 15 பேரை திட்டமிட்டு அவர்களில் யார் உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதை கவுரமாக தேர்வு செய்யவேண்டும்.
 
ஓவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானதே. அதே சமயம் ரன் விகிதத்தை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். விக்கெட் கையில் இருக்கும் போது கடைசி 10 - 12 ஓவர்களில்  நாங்கள் எப்படி பேட் செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil