Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்ககாரா களத்தில் இறங்கும்போது கரகோஷ மரியாதை செய்த இந்திய வீரர்கள்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (15:48 IST)
தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும் சங்ககாரா இன்று பேட்டிங்கிற்காக களமிறங்கியபோது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் அனைவரும் கரகோஷம் செய்தனர்.
 

 
களத்துக்குள் இறங்கி பிட்ச் அருகே வரும் போது இந்திய வீரர்கள் வரிசையாக நின்று சங்ககாராவுக்கு கரகோஷ மரியாதை செய்தனர்.
 
திமுத் கருணரத்னே, உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறிய பிறகு சங்ககாரா களமிறங்கினார். அப்போது பிட்ச் நோக்கி வரும்போது இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று கரகோஷ மரியாதை செய்தனர், கிரீஸிற்குச் சென்று கார்டு எடுக்கும் முன் விராட் கோலியுடன் கைகுலுக்கினார் சங்ககாரா.
 
இந்நிலையில் சற்று முன் அவர் 32 ரன்களில் மீண்டும் ஒரு முறை அஸ்வினிடம் சிக்கினார். பந்து திரும்ப சங்ககாரா மட்டை விளிம்பில் பட்டு வெளியேற, ரஹானே பாய்ந்து பிடித்தார். 87 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார் சங்ககாரா.
 
தற்போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. சில்வா 41, திரிமானே 0, களத்தில் உள்ளனர்.

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

Show comments