Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்: கொல்கத்தா அணியிலிருந்து பிஸ்லா விடுவிப்பு

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்: கொல்கத்தா அணியிலிருந்து பிஸ்லா விடுவிப்பு
, சனி, 8 நவம்பர் 2014 (08:32 IST)
ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான வீரர்கள் பரிமாற்றத்தில் கொல்கத்தாவின் விக்கட் கீப்பர் மன்விந்தர் பிஸ்லாவை பெங்களூர் அணி வாங்கியுள்ளது.
 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பல அணிகள் விளையாடி வருகின்றன.
 
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கான 8 ஆவது ஐ.பி.எல். போட்டி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இதில் இந்த ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பிஸ்லா கழற்றி விடப்பட்டுள்ளார். பிஸ்லாவை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil