Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் போதுமான ரன் எடுக்கவில்லை: கேப்டன் தோனி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் போதுமான ரன் எடுக்கவில்லை: கேப்டன் தோனி
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (15:27 IST)
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த 157 ரன்கள் போதுமானதாக இல்லை என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறுகையில், கொல்கத்தா அணிக்கு எதிராக நாங்கள் எடுத்த ரன் போதுமானதாக இல்லை.

கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணியில் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். மேலும்  அந்த அணியின் ரஸ்சல், டென்டஸ்சாட் சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர், என்றார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் இது குறித்து கூறும்போது, ரஸ்சல், ரியான் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிக அற்புதமாக இருந்தது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil