Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (10:15 IST)
இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஆரம்பத்தில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குக் காரணம் மெதுவான அமெரிக்க ஆடுகளங்களில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என நினைத்துதான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்காமல் வழக்கம் போல தன்னுடைய இடமான மூன்றாவது இடத்தில் ஆடவேண்டும் எனவும் கருத்துகள் எழுந்தன. அதே நேரத்தில் கோலி வெகு விரைவிலேயே மீண்டு தன்னுடைய ஃபார்முக்கு வருவார் என்று அவருக்கு ஆதரவு குரல்களும் முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்தன.

இப்போது சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் மெல்ல தன் பழைய ஃபார்முக்கு திரும்பி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக ஆடி 37 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய இரண்டு வடிவங்களிலும் சேர்த்து) 3000 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

எமோஷனல் ஆன ரோஹித் ஷர்மா… ஆறுதல் படுத்திய கோலி- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments