Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

vinoth
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (11:11 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அவரால் அவருடைய முந்தைய ‘ரன் மெஷின்’ வேகத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய உச்சத்தைத் தொட்டு கீழிறங்க தொடங்கிவிட்டார் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. ஆனாலும் அவர் இடையிடையே சில நல்ல இன்னிங்ஸ்களையும் ஆடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார். இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில் அவர் 15 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதுவரை இந்த சாதனையை சச்சின் மற்றும் சங்ககரா ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments