Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அது முக்கியமில்லை… நீ விளையாடு…” தினேஷ் கார்த்திக்கிடம் கோலி சைகை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:56 IST)
இந்திய அணியின் பேட்ஸ்மேன் கோலி நேற்று 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 20 ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அப்போது கோலி எதிர்முனையில் 49 ரன்களோடு இருந்தார். அதனால் அவருக்கு சிங்கள் எடுத்து ஸ்ட்ரைக் தரவா எனக் கோலியிடம் கேட்டார். ஆனால் கோலி “வேண்டாம். அடித்து ஆடு” என்று கூறி சைகை செய்தார். இது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments