Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கும், வில்லியம்சனுக்கும் 19 வயதிலிருந்தே பகை – ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:13 IST)
இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆட்டம் அரையிறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் தீவிரமான ஆர்வத்தோடு உள்ளனர்.

நியூஸிலாந்தின் கேப்டன் வில்லியம்சனுக்கும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கும் 11 வருடத்துக்கு முன்னால் தீராத ஒரு கணக்கு இருக்கிறது. ஒருவகையில் அதை தீர்த்து கொள்வதற்காகவே இந்த மேட்ச் என்று கூட சொல்லலாம்.

2008ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலக கோப்பை நடைபெற்றது அதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோஹ்லி, நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன். இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதின. அப்போது தனது அபார திறமையால் 43 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தார் விராட் கோஹ்லி.

தற்போது 11 வருடங்கள் கழித்து இருவரும் தங்களது டீம் கேப்டன்களாய் அதே போன்ற மற்றொரு அரை இறுதியை எதிர்கொள்கிறார்கள். இதனால் இருவர் பக்கமுமே பலமான ஒரு மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments