Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித் ஷர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?... கம்பீர் அளித்த பதில்!

vinoth
திங்கள், 22 ஜூலை 2024 (14:01 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இதற்கான அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான பும்ரா, ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. பயிற்சியாளராக கம்பீரின் முதல் தொடர் என்பதால் அனைத்து வீரர்களும் இடம்பெற வேண்டும் என கம்பீர் விரும்பியதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கம்பீர். அப்போது பல விஷயங்களைப் பேசிய கம்பீர் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசினார். அதில் “கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் உலகத் தரமான வீரர்கள். அவர்கள் இப்போதும் ஃபார்முடன் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சிறப்பாக பங்களிப்பார்கள். உடல்தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாடலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments