Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே..

Arun Prasath
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:36 IST)
பஞ்சாப் அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே, கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் வகித்திருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் தான் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார் என கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற பஞ்சாப் அணியின் போர்டு மீட்டிங்கில், அணில் கும்ப்ளே ஐபிஎல்-ன் பஞ்சாப் அணியின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. முன்னதாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளராக ஜார்ஜ் பெய்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அணில் கும்ப்ளே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments