Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… கபில்தேவ் எச்சரிக்கை!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:52 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் லீக் போட்டிகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த கபில்தேவ் மனதில் பட்டதை தைரியமாக கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் டி 20 போட்டிகள் மற்றும் தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்து வரும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “லீக் போட்டிகள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

அவற்றைக் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு ஐசிசிக்கு உள்ளது. தற்போதைய கிரிக்கெட் ஐரோப்பாவின் கால்பந்து போட்டிகளை போல உள்ளன. கால்பந்து போட்டிகளில் லீக் போட்டிகள் அதிகமாகி சர்வதேச போட்டிகள் என்பதே உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் விளையாடுவது போல கிரிக்கெட்டும் மாறிவிடும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments