Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும் இந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால் மிகவும் சோர்வடைவதாகவும், இதனால் மற்ற இந்திய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ”ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் சோர்வுற்று விடுவதாக கருதினால் ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments