பயிற்சியில் ஈடுபட்ட கே.எல்.ராகுலுக்கு காயம்! – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (09:58 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அணியிலிருந்து கே.எல்.ராகுல் விலகுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் தொடங்க உள்ளது.

இதற்கான பயிற்சி ஆட்டங்கள் மெல்போர்னில் நடந்து வந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் கே.எல்.ராகுல் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் விளையாடப்போவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் கே.எல்.ராகுல் இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments