Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (08:06 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்திய அணி அதன் பிறகு சொதப்ப ஆரம்பித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்து மூன்றாவது டெஸ்ட்டில் போராடி டிரா செய்தது.

இதையடுத்து மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கே எல் ராகுல் வலது கையில் காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்ஸிங் டே போட்டிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அவரின் காயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக கே எல் ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments