Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா இல்லன்னா இந்திய பவுலிங் ஜீரோ… கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (08:13 IST)
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி 20 உலகக் கோப்பையை வென்ற ஒருமாதத்துக்குள்ளாகவே முழு பலம் கொண்ட இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழந்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 27 ஆண்டுகளாக இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இந்திய அணி இழந்துள்ளது. இந்த தொடரில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவைத் தவிர வேறு யாருமே சரியாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா அவுட் ஆனதும் இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவது மூன்று போட்டிகளிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் “பும்ரா இல்லையென்றால் இந்திய் அணியின் பவுலிங் யூனிட் ஜீரோதான்… நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டுள்ளார். அதில் பல இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் “நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments