Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானாதன் ட்ராட் திடீர் ” ஓய்வு “

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானாதன் ட்ராட் திடீர் ” ஓய்வு “
, செவ்வாய், 5 மே 2015 (11:13 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான  ஜானாதன் ட்ராட் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார்.
 

 
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்  ஜானாதன் ட்ராட். இவரது அற்புதமான சில ஷாட்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதல் மறக்க முடியாது. எனினும் சமீபகாலமாக ஜானாதன் ட்ராட்டின் செயல்பாடு சொல்லும் அளவுக்கு இல்லை. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் பங்குபெற்ற இவர் 6 இன்னிங்சில் விளையாடி வெறும் 72 ரன்கள் தான் எடுத்துள்ளார்.
 
இதன்காரணமாகவே ட்ராட் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பங்காற்ற போதுமான திறன் தற்போது என்னிடம் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். இதுவரை ட்ராட் 52 டெஸ்டில் பங்குபெற்று 3835 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டியில் பங்குபெற்று 2819 ரன்களை சேகரித்துள்ளார் எப்ன்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil