Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (07:26 IST)
ஐபிஎல் தொடர் தொடங்கி ரசிகர்களை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் பவுலிங் எடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்துக் குவித்தது. இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் சதமடித்துக் கலக்கினார்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் கம்பேக் கொடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வள்ளலாக மாறினார். அவர் பந்தில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினர் SRH பேட்ஸ்மேன்கள். இந்த இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி ஆர்ச்சர் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் விட்டுக்கொடுத்த மிக அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையை இதன் மூலம் ஆர்ச்சர் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments