பும்ராவின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு… பிசிசிஐ எடுத்த முடிவு!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (08:06 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்ட நிலையில் பும்ரா வகித்து வந்த துணைக் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கு துணைக் கேப்டனாக யாரையுமே பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாகப் பங்களித்து வரும் பும்ரா ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவரிடம் இருந்து துணைக் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments