Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு.!

Senthil Velan
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (20:33 IST)
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது.   
 
இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.


ALSO READ: கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!
 
இந்நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments