Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையானார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

தந்தையானார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
, திங்கள், 11 மே 2015 (09:08 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் - புவனேஸ்வரி தேவி தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். இவரின் பந்துவீச்சு அணிக்கு எடுபட்டதோ இல்லையோ ஆனால் இவரின் பெயர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையான நிகழ்வு தான். 
சமீபத்தில் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கும் சென்றார். பின்னர் ஜாமீன் பெற்று வெளிவந்து புவனேஸ்வரி தேவி என்ற பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் - புவனேஸ்வரி தேவி தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எங்களுக்கு அருமையான ஒரு தேவதை பிறந்துள்ளதாக  ஸ்ரீசாந்த் டுவிட் செய்துள்ளார்.
 
ஸ்ரீசாந்த் இதுவரை 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil