Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்தாரா இஷான் கிஷான்? உள்ளூர் போட்டியில் விளையாடாமல் தவிர்ப்பு!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (14:12 IST)
இந்திய அணியில் சமீபத்தைய சில ஆண்டுகளாக வாய்ப்புகள் பெற்று வருகிறார் இஷான் கிஷான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றினார். ஆனாலும் அவருக்கான இடம் இந்திய அணியில் இன்னும் நிரந்தமராகவில்லை.

அதே போல தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவாரா இல்லை நான்காவது வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில் “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடரின் போது விடுப்பு வேண்டும் எனக் கேட்ட இஷான் கிஷான் அதன்பிறகு துபாய்க்கு சென்று விடுமுறையைக் கழித்தார். ஆனால் அதன் பிறகு தற்போது நடந்து வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி… தேதி பற்றிய தகவல்!

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments