Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:53 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

பெரும்பாலான அணிகள் தங்கள் அணியில் முன்பு இடம்பெற்றிருந்த வீரர்களைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினர். ஆனால் பெங்களூர் அணி தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் நியாயமான விலைக்குக் கிடைத்தபோதும் அவர்களைக் கைப்பற்ற ஆர்வம் காட்டவில்லை. இது சம்மந்தமாக அந்த அணி நட்சத்திர ஆட்டக்காரர் கோலி அதிருப்தியுடன் அணி நிர்வாகிகளுக்கு மெஸேஜ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் பெங்களூர் அணியின் இயக்குனர் மோ பாபட் அணித் தேர்வு குறித்து விராட் கோலி சில மெஸெஜ்களை அவருக்கே உண்டான பாணியில் அனுப்பினார் எனக் கூறினார். மேலும் இன்னும் யார் கேப்டன் என்பதைத் தீர்மானிக்கவில்லை என்றும் விரைவில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு மீண்டும் கோலி கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments