Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:39 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும் இடது கை பேட்ஸ்மேனான இந்த வைபவ், பீகார் கிரிக்கெட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் தன்னுடைய 12 ஆவது வயதில் களமிறங்கி விளையாடி கவனம் பெற்றவர். இவர் இதற்கு முன்னர் மிகக் குறைந்த வயதில் முதல் தரக் கிரிக்கெட் ஆடியவர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால் இப்போது அவரின் உண்மையான வயது 15 எனவும், வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியுள்ளதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஆனால் வைபவ்வின் தந்தை அதை மறுத்துள்ளார். தன்னுடைய மகனின் வயதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments