Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:39 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும் இடது கை பேட்ஸ்மேனான இந்த வைபவ், பீகார் கிரிக்கெட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் தன்னுடைய 12 ஆவது வயதில் களமிறங்கி விளையாடி கவனம் பெற்றவர். இவர் இதற்கு முன்னர் மிகக் குறைந்த வயதில் முதல் தரக் கிரிக்கெட் ஆடியவர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால் இப்போது அவரின் உண்மையான வயது 15 எனவும், வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியுள்ளதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஆனால் வைபவ்வின் தந்தை அதை மறுத்துள்ளார். தன்னுடைய மகனின் வயதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments