Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

Prasanth Karthick
சனி, 4 ஜனவரி 2025 (10:43 IST)

தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ள நிலையில் ஓய்வை அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில் 2 தோல்வி, 1 ட்ராவை இந்திய அணி சந்தித்தது. இதனால் இந்த கடைசி டெஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா தானாக விலகியுள்ளார்.

 

இதனால் அணியை பும்ரா வழிநடத்தி வருகிறார். ரோஹித் சர்மா இந்த போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், விரைவில் அவர் டெஸ்ட் தொடரில் ஓய்வு அறிவிக்க இருப்பதாகவும், கிரிக்கெட் வாரிய மேலிடம் அவரை ஓய்வு அறிவிக்க சொல்லி அழுத்தம் தருவதாகவும் பேச்சுகள் வெளியாகியுள்ளது.
 

ALSO READ: 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா “ஃபார்மில் இல்லாததால் விலகி இருக்கிறேனே தவிர ஓய்வு பெறவில்லை. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே யோசித்து முடிவு எடுக்கிறேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments