Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் தீர்ப்பு: வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது - ராகுல் டிராவிட்

ஐபிஎல் தீர்ப்பு: வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது - ராகுல் டிராவிட்
, சனி, 18 ஜூலை 2015 (09:21 IST)
சமீபத்திய ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பு இருஅணி வீரர்களுக்கும் சற்று ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
தற்போது இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிடம் சமீபத்தில் வெளிவந்த ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ஐபிஎல் தொடரில் அரங்கேறிய சம்பவங்கள் வீரர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறான செயல்கள் பல வீரர்களை பாதித்துள்ளது. இதுபோன்ற ஒரு தீர்ப்பு அணியில் உள்ள வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்றார்.
 
இதனால் இளம் வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர வீரர்களை வேறு அணிகள் ஏலத்தில் எடுத்து கொள்ளும். எனினும் ஆர்.எம். லோதா குழுவின் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil