Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்… பந்து வீச்சைத் தேர்வு செய்த சென்னை கிங்ஸ்! மிரட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (19:10 IST)
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளன.

இந்நிலையில் 13 வது ஐபிஎல் போட்டி இன்று துவங்கி வரும் நவம்பர் 10 ஆம் தேதி நடக்கிறது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்க்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் சிங்கங்களும், மும்பை இந்தியன்ஸ் சிறுத்தைகளும்  இரவு 7:30 மணிக்கு மோதுகின்றனர். எனவே தற்போது இரு அணிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பமே அசத்தாகி உள்ளதால் சென்னை கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.#IPL2020 #IPL #Chennaikingsn #mumbaiindians
 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்