Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலத்தின் போது மல்லிகா சாகர் செய்த தவறு… பெங்களூர் அணிக்கு ஏற்பட்ட நஷ்டம்!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (09:11 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதே போல பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல், அல்ஜாரி ஜோசப், ஷாருக் கான் உள்ளிட்ட பல வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். ஆனால் பல வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் கோரப்படாமல் ‘அன்சோல்ட்’ ஆனார்கள்.

இந்த ஏலத்தை மல்லிகா சாகர் சிறப்பாக நடத்தினார். ஆனால் இடையில் அவர் ஒரு சிறு தவறை செய்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்பின் ஏலத்தின் போது பெங்களூர் அணி ஏலம் கேட்ட போது 6.6 கோடி ரூபாய்க்கு 6.8 கோடி ரூபாய் என தவறாக அறிவித்துவிட்டார். இறுதியில் பெங்களூர் அணி அவரை 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்தாலும், இதனால் பெங்களூர் அணிக்கு 20 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ அணிக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அறிவித்தார் சஞ்சய் கோயங்கா!

கோலி தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்… அஸ்வின் சொல்லும் காரணம்!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இடம்பெறாததால் சிராஜ் எடுத்த அதிரடி முடிவு!

கில் என்ன எனக்கு மாமனா? மச்சானா?.. ரசிகரின் கேள்விக்கு சிம்பிளாக பதில் சொன்ன அஸ்வின்!

ஷகீப் அல் ஹசனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments