Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங்குக்கு ரூ.7 கோடி

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங்குக்கு ரூ.7 கோடி
, சனி, 6 பிப்ரவரி 2016 (11:49 IST)
9வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெர்ங்களூருவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


 

இதில் அதிக விலைக்கு எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோ பட்லரை மும்பை இந்தியன்ஸ் 3.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை டெல்லி அணி 4.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

கெவின்பீட்டர்சனை ரூ3.5 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்தது. மேற்கிந்திய தீவுகளின் ஸ்மித்தை ரூ2.30 கோடிக்கு ராஜ்கோட் அணி ஏலம் எடுத்தது. புனே அணி இஷாந்த் சர்மாவை ரூ3.80 கோடிக்கு ஏலம் எடுத்தது - ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காவும், ஆஷிஸ் நெஹ்ரா ரூ5.50 கோடிக்கும்,யுவராஜ்சிங்கை ரூ7 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil