ஐபிஎல் -2021 - பார்வையாளர்களுக்கு அனுமதி!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:00 IST)
ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் பல நாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு முக்கிய பொழுதுபோக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா மதீஷா பத்திரனா? இலங்கை அணியின் முக்கிய அறிவிப்பு..!

பும்ராவுக்கு திடீரென நஷ்டமான ரூ.2 கோடி.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?

என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

சிஎஸ்கே அணிக்கு ஏன் வந்தேன் தெரியுமா? முதல்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments