ஐபிஎல் -2021 - பார்வையாளர்களுக்கு அனுமதி!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:00 IST)
ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் பல நாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு முக்கிய பொழுதுபோக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments