Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை!
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (17:28 IST)
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக 600 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
 

 
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் கோலி விளாசினார்.
 
இதன் மூலம் சென்னை அணிக்கு எதிராக ஒட்டு மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி, 646 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தனிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
 
விராட் கோலி பலவிதங்களில் விமர்சிக்கப்பட்டாலும், சென்னை அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil