Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்க: இந்திய அணி அபார வெற்றி!!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (15:23 IST)
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  
 
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் கடந்த பத்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 601 ரன்கள் குவித்தது. விராட் கோலி இரட்டை சதமும் மயாங்க் அகர்வால் சதமும் அடித்தனர்.
 
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது.
ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 
அதோடு இந்திய அணி இன்னிங்ஸ், மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments