Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை அரை இறுதியில் டாஸ் வெல்லாததே இந்திய தோல்விக்கு காரணம் - ரவிசாஸ்திரி

உலகக் கோப்பை அரை இறுதியில் டாஸ் வெல்லாததே இந்திய தோல்விக்கு காரணம் - ரவிசாஸ்திரி
, புதன், 1 ஏப்ரல் 2015 (10:24 IST)
உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
 

 
11 ஆவது உலகக் கோப்பை மகுடத்தை ஆஸ்திரேலிய அணி வென்று விட்டது. எனினும் இந்திய அணியின் அரை இறுதி தோல்வி குறித்து விமர்சனங்களும் விளக்கங்களும் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரையும் வறுத்து எடுத்துவிட்டனர்.
 
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி கூறுகையில், கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் சேர்த்து எழும் விமர்சனங்கள் முட்டாள் தனமானது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் கோலி 4 சதங்கள் விளாசியுள்ளார். 
 
அனுஷ்கா சர்மாவின் வருகையால் தான் கோலியின் ஆட்டம் பாதிக்கப்பட்டது என்ற கருத்துக்கே இங்கு இடமில்லை என்றார். கேப்டன் தோனியின் ஆட்டமும் நன்றாக இருந்தது. எனினும் முக்கியமான அரை இறுதி போட்டியில் டாஸ் வெல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil