Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்…. லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றி யாருக்கு?

vinoth
திங்கள், 14 ஜூலை 2025 (08:08 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணியும் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து எந்த அணியும் முன்னிலை பெறாத நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் ஆக்ரோஷத்துக்கு அடங்கினர். 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்கான இந்த இலக்கை துரத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்டமுடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. கே எல் ராகுல் 33 ரன்களோடு களத்தில் நிற்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 6 விக்கெட்கள் உள்ளன. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments