Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; மழை பெய்தாலும் போட்டி உண்டு!? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விதிவிலக்கு!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:05 IST)
ஆசியக்கோப்பை போட்டிகளில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆசியக்கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதன் தகுதி சுற்று ஆட்டங்களில் முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியுடன் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பிரித்து அளிக்கப்பட்டன. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் 4 தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த போட்டிகளில் வரும் 10ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. ஆனால் அன்றைய தினத்தில் அந்த பகுதியில் 90% மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டியும் முழுதாக நடக்காதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விதிவிலக்கு அறிவித்துள்ளது. ஒருவேளை அன்றைய தினம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கு இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments