Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:19 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 போட்டி இன்று நடக்க இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் மோத இருந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடும் நேரத்தில் திடீரென மழை வந்ததையடுத்து போட்டி சில மணிநேரங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது
 
ஆனால் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தததை அடுத்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி நடத்த மைதானம் ஏதுவாக இல்லை என்று கூறினார்கள். இதனை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என்று வந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments