Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:19 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 போட்டி இன்று நடக்க இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் மோத இருந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடும் நேரத்தில் திடீரென மழை வந்ததையடுத்து போட்டி சில மணிநேரங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது
 
ஆனால் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தததை அடுத்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி நடத்த மைதானம் ஏதுவாக இல்லை என்று கூறினார்கள். இதனை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என்று வந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments