Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டி - நியூசிலாந்து அணிக்கு 281 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (17:17 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிராக இன்று இந்தியா ஆடிய ஒரு நாள் போட்டியில்  8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்தியா - நியுசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
 
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்திள் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.
 
அந்நிலையில், டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி 280 ரன்கள் குவித்தனர். அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்தார். 
 
முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 280 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடும் நியுசிலாந்து அணிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments