Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
, ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (14:08 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இன்று ஒருநாள் தொடரின் முதல் போட்டி தொடங்கியது. இதில் நியூசிலாந்து அணி ஆரம்பத்திலே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருக்கிறது


 

 
இந்தியா– நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ் தலமான தர்மசாலாவில் நடைப்பெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்தியா முதல் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. டெஸ்ட் தொடரில் விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற முன்னணி பவுலர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
 
நீயூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் பந்து வீச்சு மூலம் எளிதில் இந்திய வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் இந்தியா இந்த ஒருநாள் போட்டியில் பெரிய நெருக்கடியை சந்திக்க உள்ளது.
 
இதுவரை 6.1 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலே நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், பாண்டியா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா அபார வெற்றி