Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி: பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது!

கோலி தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி: பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது!

கோலி தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி: பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது!
, ஞாயிறு, 15 ஜனவரி 2017 (14:20 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


 
 
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா உடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
 
முதல் ஒரு நாள் போட்டி புனேவில் பகல் 1.30 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். டெஸ்ட் தொடரை போல ஒரு நாள் போட்டியையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் இறங்கியுள்ளதால் இதில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் கோலி தலைமையின் கீழ் முதன் முதலாக முன்னாள் கேப்டன் தோனி விளையாட இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்திற்குள் ஓடி வந்த தோனி ரசிகர் செய்தது? நெகிழ்ச்சி வீடியோ!!