Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச முடிவு

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:15 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி, இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த மைதானத்தைப் பொறுத்தவரை, இங்கு இந்திய அணி, 3 ஆட்டங்களில் விளையாடி 2இல் வெற்றியும் (தென்ஆப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

இங்கிலாந்து அணி, இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி அதில் 4 இல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டத்திற்கு முடிவில்லை.

இந்த மைதானத்தில் இந்திய அணியின் முன்கள வீரர்களான ஷிகர் தவான் மற்றும் கோஹ்லி சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களத்தில் உள்ளனர்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments