Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச முடிவு

2 ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச முடிவு
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:15 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி, இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த மைதானத்தைப் பொறுத்தவரை, இங்கு இந்திய அணி, 3 ஆட்டங்களில் விளையாடி 2இல் வெற்றியும் (தென்ஆப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

இங்கிலாந்து அணி, இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி அதில் 4 இல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டத்திற்கு முடிவில்லை.

இந்த மைதானத்தில் இந்திய அணியின் முன்கள வீரர்களான ஷிகர் தவான் மற்றும் கோஹ்லி சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil