Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வே அணிக்கு 167 ரன்கள் இலக்கு வைத்த இந்தியா! ஆறுதல் வெற்றியாவது பெறுமா ஜிம்பாப்வே?

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஜூலை 2024 (18:34 IST)

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடந்து வரும் நிலையில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றிருந்தாலும் அடுத்த 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் தொடருக்கான வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் 12, 13 ரன்களிலேயே அவுட் ஆகினர். ஆனால் சஞ்சு சாம்சன் நின்று விளையாடி அரைசதம் விளாசி 58 ரன்களை குவித்தார். தொடர்ந்து ரியான் பராக் 22 ரன்களும், ஷிவம் துபே 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்த இந்திய அணி 168 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்நிலையில் களமிறங்கியுள்ள ஜிம்பாப்வே அணி 3 ஓவருக்குள்ளேயே 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments