Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:54 IST)
நாட்டிங்காமில் நடைபெற்ற 3 ஆவது ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் 114 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
 
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தாலும், பின் ஒரு நாள் போட்டிகளில் வலுவான நிலையில் உள்ளது.
 
முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
 
இதைத்தொடர்ந்து 30 ஆகஸ்ட், 2014 அன்று நாட்டிங்காம் நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றது.
 
இந்த வெற்றியால் 114 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் 3 புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
 
மேலிம் 2 ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை 11 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Show comments