Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளோம்…” பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (10:28 IST)
இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என சூசகமாக சொல்வது  போல அமைந்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments