Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோனது

மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோனது

மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோனது
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (09:58 IST)
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது.


 


முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 196 ரன்களில் ஆல்-அவுட்டானது. அதை தொடர்ந்து ஆடிய, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய போது, 4வது நாள் ஆட்டத்தில் மழை வந்து குறுக்கீடு செய்தது. அப்போது, மேற்கிந்திய தீவுகள் அணி 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாள் ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டு பிறகே தொடங்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ‘டிரா’ செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர்.

மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களைச் சேர்த்து, போட்டியை டிரா செய்தது. அபாரமாக ஆடிய ரோஸ்டன் சேஸ் 137 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். சொந்த மண்ணில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியில் இருந்து தப்பியது மேற்கிந்திய தீவுகள் அணி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைக்கு பாலூட்டும் கிறிஸ் கெய்ல்