Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை… நேற்று நடந்த மோசமான சாதனை!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (07:58 IST)
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா சிறப்பான ஆட்டத்தை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியது. ஆனால் ஒரு கட்டத்தில் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்ததும், இந்திய அணியின் பேட்டிங் நிலைகுலைய ஆரம்பித்தது.

இதனால் இந்திய அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்களையும் இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினார்கள்.

இந்திய அணி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி தனது அனைத்து விக்கெட்களையும் சுழல்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியது இதுதான் முதல் முறை. பின்னர் பந்துவீசிய இந்திய அணி, இலங்கையை 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments