Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை இழந்தது இந்தியா: மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2016 (16:56 IST)
இந்தியா அஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


 
 
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 295 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. விராட் கோஹ்லி 117 ரன்கள், தவான் 68 ரன்கள், ரஹானே 50 ரன்கள் அடித்து இந்திய அணியை 295 ரன் சேர்க்க உதவினர். 50 ஓவருக்கு 6 விக்கெட்டை இழந்து 296 ரன்னை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல சிறப்பாக பொருமையாக விளையாடியது. ஆரோன் ஃபின்ச் 21 ரன்னில் வெளியேறினாலும் மார்ஷ் 62 ரன் சேர்த்து அணிக்கு உதவினார். கேப்டன் ஸ்மித் தன் பங்கிற்கு 41 ரன் சேர்த்து அணியை முன்னேற்றினார். ஜார்ஜ பெய்லி 23 ரன்னில் வெளியேற, மிட்சல் மாஷும் 17 ரன்னில் நடையை கட்ட இந்திய அணிக்கு ஓரளவு பிரகாசம் தெரிந்தது.
 
ஆனால் மறுமுனையில் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 96 ரன் எடுத்து இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் யாதவ், ஸ்ரன், ஜடேஜா ஆகியோர் தலா 2 விகெட்டுகளை கைப்பற்றினர்.

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

Show comments