Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடரை இழந்தது இந்தியா: இரண்டாவது டி-20 போட்டி மழையால் டிரா

தொடரை இழந்தது இந்தியா: இரண்டாவது டி-20 போட்டி மழையால் டிரா

தொடரை இழந்தது இந்தியா: இரண்டாவது டி-20 போட்டி மழையால் டிரா
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (08:34 IST)
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டி மழையால் டிரா ஆனது. ஏறகனவே முதல் இருபது ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதால் அந்த அணி இந்த தொடரை வென்றுள்ளது.


 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 143 ரன்னில் கட்டுப்படுத்தியது. இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணியில் சார்லஸ் 43 ரன்னும், சிம்மன்ஸ் 19 ரன்னும் அடித்தனர்.
 
144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்த போட்டி கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. இதன்மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள்