இரண்டாவது ஒருநாள் போட்டி… இந்திய அணி பரிதாப தோல்வி

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (07:48 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஜோடிகள் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 182 ரன்களை எளிதாக சேர்த்தது. அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments