Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:31 IST)
எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மொகாலியில் நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில் 2-வது இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது
 
இதனை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 12ஆம் தேதி பெங்களூரில் தொடங்க உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments